மும்பை மும்பையில் புறநகர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்து மும்பை புறநகர் ரெயிலில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்தார். காவல்துறையினர் உடனடியாக அந்த மொபைல் எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். அந்த அழைப்பு மும்பையில் உள்ள ஜுகு பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அங்கு சென்று மிரட்டல் விடுத்த நபரைக் […]
