திருப்பதியில் பயங்கரம்… சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி பலி… அதிர்ச்சி சம்பவம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதிதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலை சாலை வழியாக வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதேபோல் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய மலை பாதைகள் வழியாகவும் ஏராளமான பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.சிறுத்தை தாக்கி சிறுமி பலிதற்போது தொடர் விடுமுறை, அதோடு இன்று சனிக்கிழமை என்பதால் திருப்பதி திருமலையில் நேற்று முதலே பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அலிபிரி மலைப்பாதையில் ஏராளமான பக்தர்கள் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று அலிபிரி மலைப்பாதையில் தனது பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
​ தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு… திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு வந்த புதிய சிக்கல்!​அலிபிரி நடைபாதைஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோவூர் மண்டலத்திற்கு உட்பட்ட போத்தி ரெட்டி பாளையத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் தனது மனைவி சசிகலா மற்றும் தங்களின் 6 வயது மகள் லக்ஷிதாவுடன் நேற்று மாலை திருப்பதிக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று இரவு 7.30 மணி அளவில் அலிபிரி மலை பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
மாயமான சிறுமிஅப்போது திடீரென சிறுமி லக்ஷிதா மாயமானார். இதையடுத்து அப்பகுதியில் சிறுமியின் பெயரை சொல்லி அழைத்து பார்த்த அவர்கள், தொடர்ந்து தீவிரமாக தேடியுள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் திருமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
​ மும்பை டூ வேளாங்கண்ணி… அடுத்தடுத்து சிறப்பு ரயில்கள்… அள்ளிவிடும் தெற்கு ரயில்வே!​தேடுதல் வேட்டைஇந்த புகாரை தொடர்ந்து போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தொடங்கினர். சிசிடிவி காட்சிகளை பார்த்த போது சிறுமி, நரசிம்ம சாமி கோவிலுக்கு முன்பாக பெற்றோருக்கு முன்னால் நடந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் இரவு முழுவதும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிறுமியின் உடல் கண்டெடுப்புஇந்நிலையில் இன்று காலை அவ்வழியாக நடந்து சென்ற பக்தர்கள் நரசிம்ம சாமி கோவில் அருகே ரத்தக் காயங்களுடன் சிறுமியின் உடல் கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றினர். சிறுமியின் உடலுக்கு அருகே சிறுத்தையின் சாணம் கிடந்தை பார்த்த அதிகாரிகள் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
​ 20 வயது மகளை கொன்று.. உடலை பைக்கில் கட்டி கிராமம் முழுக்க இழுத்துச்சென்ற அப்பா!​சிறுவன் கவுசிக்திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து சென்ற 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அலிபிரி ஆஞ்சநேயர் கோவில் அருகே கவுசிக் என்ற 3 வயது சிறுவனை சிறுத்தை இழுத்து சென்றது. இதையடுத்து அங்கிருந்த பக்தர்கள் விரட்டிச் சென்று சிறுத்தையை தாக்கி சிறுவனை மீட்டனர். காயமடைந்த சிறுவனுக்கு தேவஸ்தான மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
​ திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த ராதிகா… சாதாரண விஷயம் இல்ல!​பக்தர்கள் அச்சம்
இந்த சம்பவத்தை தொடர்ந்து அலிபிரி மலைப்பாதையில் செல்லும் பக்கதர்கள் குழுவாக செல்ல வேண்டும் என்றும், அலிபிரி பாதையில் செல்லும் பக்தர்கள் குழுவுடன் ஒரு பாதுகாவலர் செல்வார் என்றும் தேவஸ்தானம் அறிவித்தது. மேலும் இரவு 10.30 மணிக்கு மேல் அலிபிரி மலை பாதையில் அனுமதி மறுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்திருப்பது பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனவிலங்குகள் அச்சுறுத்தல்அலிபிரி மலைப்பாதை சேஷாசலம் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் இங்கு வன விலங்குகளின் அச்சுறுத்தலும் அதிகமாக உள்ளது. இனிமேலும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காத வண்ணம் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
​ குந்தவை த்ரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் டிவி நடிகை… காவியா அறிவுமணியின் கலக்கல் க்ளிக்ஸ்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.