Nelson: விருது விழாவில் அவமானமா ? நடந்தது என்ன ? வெளிப்படையாக பேசிய நெல்சன்..!

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு பிறகு பழைய ரஜினியை திரையில் பார்த்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என ஜெயிலர் திரைப்படத்தை ஒரு கலவையாக நெல்சன் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

விருது விழா சம்பவம்

மேலும் பீஸ்ட் படத்தில் விட்டதை ஜெயிலர் படத்தில் நெல்சன் பிடித்துவிட்டதாக ரசிகர்கள் கமன்ட் அடித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் நெல்சன் சரியாக நடத்தப்படவில்லை என ஒரு குற்றசாட்டை ரசிகர்கள் முன் வைத்தனர்.

Jailer collection: ஜெயிலர் படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரம்..கெத்து காட்டும் தலைவர்..!

அதாவது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என தொடர் வெற்றிகளை பெற்று பிரபலமான இயக்குனராக வலம் வந்தார் நெல்சன். இதைத்தொடர்ந்து நெல்சனுக்கு விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதன் காரணமாக நெல்சன் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

மேலும் பல ட்ரோல்களுக்கும் ஆளானார். ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் வரை நெல்சனை சில ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது விழாவில் நெல்சனை சிலர் சரியாக நடத்தவில்லை. மற்ற இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் கொடுத்த மரியாதையை நெல்சனுக்கு தரவில்லை என சிலர் குற்றம்சாட்டினார்.

வெளிப்படையாக பேசிய நெல்சன்

மேலும் இதைப்பற்றிய வீடியோக்கள் சமூகத்தளங்களில் செம வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் இதைப்பற்றி நெல்சன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பேட்டி கொடுத்து வந்த நெல்சனிடம் இதைப்பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நெல்சன், அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. அந்த பரபரப்பில் அதைப்பற்றியெல்லாம் கவனிக்க முடியாது.

அவர்கள் வேலையை அவர்கள் செய்தார்கள். நம்ப வேலையை நாம் பார்த்துகிட்டு போய்கிட்டே இருக்க வேண்டும். இதைப்பற்றி எல்லாம் யோசிக்க கூடாது. இதில் அவமானமோ வேறு எதுவுமே இல்லை என வெளிப்படையாக பேசினார் நெல்சன். இதைத்தொடர்ந்து இந்த சர்ச்சைக்கு நெல்சன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.