"சட்டமன்றத்தில் 1989-ம் ஆண்டு நடந்தது என்ன..?" இதோ ஜெயலலிதாவே தரும் வாக்குமூலம்.. அதிர்ச்சியில் திமுக!

சென்னை:
சட்டமன்றத்தில் 1989-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தாக்கப்பட்டாரா இல்லையா என்பதுதான் தமிழக்தில் இன்றைய ஹாட் டாப்பிக் ஆக மாறியுள்ளது. ஜெயலலிதா தாக்கப்பட்டதாக பாஜகவினரும், அதிமுகவினரும் கூற, அதை திமுகவினர் அடியோடு மறுத்து வருகின்றனர். இந்த சமயத்தில், தனக்கு சட்டமன்றத்தில் என்ன நேர்ந்தது என்பது குறித்து ஜெயலலிதாவே வாக்கமூலம் அளித்திருக்கிறார். “என்ன பாஸ் சொல்றீங்க?” என்று கேட்கிறீர்களா.. நீங்க நம்பாட்டியும் அதுதான் நிஜம்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஜெயலலிதா மீது நடந்த அந்தக் கொடூர தாக்குதல் தான், அவர் முதலமைச்சராக ஆவதற்கு தூண்டுகோலாக இருந்ததாக கூறப்படுவது உண்டு. தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது பற்றி பேசியதால் அதுதொடர்பான விவாதம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

ஜெயலலிதாவை சேலையை பிடித்து இழுத்து அடித்தார்கள் என்றும், அதை முன்னின்று நடத்தியவர் அமைச்சர் துரைமுருகன் தான் எனவும் அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் நேற்று கூறியிருந்தார்.

நேரிலா வரப்போகிறார்..?
ஆனால், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றும், அ

வினரும், நிர்மலா சீதாராமனும் கதைக் கட்டுகுவதாகவும் திமுக மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். என்ன நடந்தது என்று ஜெயலலிதா நேரில் வந்தா சொல்லப் போகிறார் என்ற தைரியத்தில் ஆள் ஆளுக்கு எதை எதையோ பேசி வந்தனர். தற்போது அதே ஜெயலலிதா தான் இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ஜெயலலிதா பேட்டி:
ஆம்.. 2002-ம் ஆண்டு ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டியில் இதுதொடர்பாக பேசியிருக்கிறார். வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் பெண் நெறியாளர் ஒருவர், “உங்கள் வாழ்க்கையில் உங்களை மிகவும் காயப்படுத்திய சம்பவம் ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்கிறார்.

“மோசமாக தாக்கப்பட்டேன்”:
அதற்கு பதிலளித்து ஜெயலலிதா கூறுகையில், “வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் என்னை காயப்படுத்திய சம்பவம் இதுதான். 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவராக நான் இருந்த போது, என் மீது சட்டமன்றத்துக்கு உள்ளேயே பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போதைய முதல்வர்

முன்னிலையில் திமுக எம்எல்ஏக்கள் என்னை தாக்கினார்கள்.

“இரண்டு மனைவிகள் பார்த்தனர்”:
என் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கருணாநிதியின் இரண்டு மனைவிகளும் விஐபி அறையில் இருந்து பார்த்தார்கள். திமுக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் என்னை அடித்தார்கள். கையில் கிடைத்த புத்தகங்கள், மைக்குகளை எடுத்து என் மீது வீசினார்கள். என் தலைமுடியை பிடித்து இழுத்தார்கள். சிலர் சேலையை இழுத்தார்கள். அதில் எனது சில தலைமுடிகள் பிய்த்து எறியப்பட்டன. அப்போது திமுக எம்எல்ஏ ஒருவர், சபாநாயகர் இருக்கையில் உள்ள பெரிய மணியை எடுத்து என்னை நோக்கி வீசினார். அதில் இருந்து தப்பித்தேன். ஒருவேளை அது என் மீது பட்டிருந்தால் நான் இன்று உயிருடன் இருந்திருக்கவே மாட்டேன்.

சபதம் எடுத்தேன்:
அந்த பயங்கர தாக்குதலில் இருந்து எனது எம்எல்ஏக்கள் என்னை போராடி காப்பாற்றினார்கள். என் மீது செருப்புகள் எறியப்பட்டன. அந்த நாளில் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டு நான் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினேன். இனி இந்த மனிதர் (கருணாநிதி) முதல்வராக இருக்கும் வரை நான் சட்டமன்றத்தில் கால் எடுத்து வைக்க மாட்டேன். அப்படி நான் கால் வைக்கிறேன் என்றால், அன்று முதலமைச்சராக நான் இருப்பேன் என சபதம் எடுத்தேன். எனது சபதத்தை 2 வருடங்களில் நிறைவேற்றினேன். இதுபோன்ற வெட்கக்கேடான சம்பவம் உலகிலேயே வேறு எங்கும் நடந்ததில்லை. எந்த பெண் அரசியல்வாதிகளும் இதை சந்தித்திருக்க மாட்டார்கள். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.