ஃபயாஸ்தின் ஏன் அப்படி பேசினார்? அனிதா டூ ஜெகதீஷ்… நீட்டை தெறிக்கவிட்ட இளம்குரல்!

”நான் சுயநலவாதியாக இருந்துட்டா பின்னாடி ஒரு துயரம் வரும் போது யாரும் வரமாட்டாங்க. இந்த சமூகத்திற்காக ஒருமுறை யோசிக்க ஆரம்பிச்சிட்டா, இப்படி தான் பேசத் தோணும். உங்களுக்கு ஒன்னுன்னா நான் வருவேன். எனக்கு ஒன்னுன்னா நீங்க வருவீங்க”. இப்படி நீட்டிற்கு எதிராக ஓர் இளம் குரல் ஆவேசமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அவரது பெயர் ஃபயாஸ்தின்.

​தொடரும் நீட் மரணங்கள்சமீபத்தில் நீட் தேர்வால் தனது மருத்துவக் கனவு பறிபோன நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரனும், அவனது தந்தையும் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்டனர். தன்னால் பொருளாதார ரீதியாக பணம் கொடுத்து நீட் பயிற்சி பெறவும், பணம் கொடுத்து மருத்துவ சீட்டை வாங்கவும் முடியும் என்றால்? பணம் தான் இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதா? ஏழை, எளிய மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு என்னவாகும்? என்ற மிகப்பெரிய சிந்தனையை உதிர்த்திருக்கிறார் மாணவன் ஃபயாஸ்தின்.ஃபயாஸ்தினின் குரல்தனது நண்பனுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்து நீட் தேர்விற்கு விலக்கு பெறுவதற்கான மிக முக்கியமான வாதமாக ஃபயாஸ்தினின் பேச்சு மாறியிருக்கிறது. இவரது அடுத்தடுத்த பேட்டிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வரும் நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிந்தனைக்களம் என்ற பெயரில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். ஃபயாஸ்தின் பேசிய விஷயங்களில் சில…
அனிதாவின் மரணம்மாணவி அனிதாவின் மரணத்தின் போது பெருசா எதுவும் புரியவில்லை. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. படிப்படியாக வளர்ந்து வரும் போது தான் நீட் தேர்விற்கு தயாராவதில் இவ்வளவு சிரமங்கள் இருக்கின்றனவா? எனத் தெரிந்தது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த நமக்கே கஷ்டமாக இருந்தால் போதிய வழிகாட்டுதல், உபகரணங்கள், பயிற்சி இல்லாத அரசு பள்ளி மாணவர்களின் நிலை எப்படி இருக்குமோ? என மனதிற்குள் கேள்விகள் எழும்.​இரண்டே வாய்ப்புகள் தான்பொருளாதார ரீதியில் சரியான பின்புலம் இல்லாத நபர்கள் மருத்துவக் கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் எங்கேயோ ஒரு கலை கல்லூரியில் படிக்க ஆரம்பித்துவிட்டனர். இவை எல்லாம் என் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கிறது. நீட் மூலம் மருத்துவ கனவை அடைய முடியவில்லையா? ஒன்னு வேறு படிப்பின் பக்கம் போய் விடு. இல்லையெனில் ஜெகதீஷ் மாதிரி.
முஸ்லீம் பின்னணிஇப்படித்தான் மத்திய அரசு மறைமுகமாக சொல்ல பார்க்கிறதோ எனத் தோன்றுவதாக குறிப்பிட்டார். இதையடுத்து ஃபயாஸ்தின் என்ற பெயரும், முஸ்லீம் பின்னணி என்ற விஷயத்தை பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர். அதுபற்றி நெறியாளர் கேட்கையில், அப்படி என்னை பற்றி கமெண்ட் செய்தவர்கள் யாரென்று எனக்கு தெரியும்.
​திராவிட மாடல் ஆட்சிஇது பெரியார் வாழ்ந்த பூமி. அம்பேத்கர் வாழ்ந்த பூமி. திராவிட மாடல் ஆட்சி இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இங்கு வந்து உங்கள் மதவாதத்தை புகுத்தினால் எடுபடாது. எங்களுக்கு சுயமாக சிந்திக்கக் கூடிய ஆற்றல் இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு மதவாதத்தை வைத்து அரசியல் செய்வீர்கள் எனத் தெரியவில்லை? அதேசமயம் என் நண்பன் ஜெகதீஷ் எடுத்த முடிவு நிச்சயம் தவறு. அப்படி ஒரு முடிவை யாரும் எடுக்கக் கூடாது என்று மாணவர் ஃபயாஸ்தின் கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.