மியான்மரில் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

யாங்கூன்,

மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுப்பது பரவலாக மேற்கொள்ளப்படும் தொழில் ஆகும். அதன்படி கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானார்கள். 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். அங்கு பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.