மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடைசி நேரத்தில் புதிய மாற்றம்: சிவ்தாஸ் மீனா உத்தரவு!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கச்சிதமாக செயல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் முக்கிய அதிகாரி ஒருவரை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை – இறுதி கட்ட பணிகள் தீவிரம்!தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள். இரண்டு முகாம்களில் பதிவு செய்யத் தவறியவர்களுக்காக சிறப்பு முகாம் வெள்ளிக் கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஞாயிற்றுக் கிழமை மூன்றாவது நாளுடன் முடிவடைகிறது. இதனால் விடுபட்டவர்கள் பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிறப்பு திட்ட செயலாக்கத்துறை!மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ள நிலையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் கீழ் வருகிறது. இத்துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி வகிக்கிறார்.
கைகோர்க்கும் துறைகள்உரிமைத் தொகை திட்டத்தை நிர்வகிப்பது சிறப்பு திட்ட செயலாக்கத்துறை என்றாலும் அதை செயல்படுத்துவதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் தான் இதை செயல்படுத்துவதற்கான துறைத் தலைவராக உள்ளார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமைத் தலைமைச் செயல் அலுவலர் தொழில் நுட்பம் தொடர்பான பணிகளை பார்க்கிறார்.திட்டம் – கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு!நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆகியவையும் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றன. மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்களும் இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைத்து வருகின்றனர்.
சிவ்தாஸ் மீனா பிறப்பித்த உத்தரவு!மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அவர் ஒட்டுமொத்த பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறார். இந்நிலையில் கடைசி நேரத்தில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரகத்தின் இணை இயக்குநரான ஜெயஷீலா கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் துணை ஆணையராக நியமிக்கப்படுவதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செப்டம்பர் 15க்குப் பின்னர்!​​
சுமார் 2 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் தகுதியான ஒரு கோடி பேரை கண்டறிந்து அவர்களின் தகவல்களை சரியாக பெற்று திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு பல துறைகளின் ஆதரவும், பணிகளும் தேவைப்பட்டாலும் அதன் பின்னர் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையே ஒவ்வொரு மாதமும் தொகையை அனுப்புவதையும், அதை கண்காணிப்பதையும் பார்த்துக் கொள்ளும் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.