திருவள்ளூர் மாவட்டம் மேல அய்யம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ்குமார் (23). இளங்கலை பட்டதாரியான இவர், தற்போது தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் படித்து கொண்டு அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளமான டெலிகிராம்-ல் உள்ள ஒரு குழுவில் இணைந்த இவர், அக்குழுவில் இருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவியிடம் பழகி வந்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த மாணவியின் இன்ஸ்டாகிராமில் உள்ள புகைப்படங்களை வைத்து மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி அவரை வீடியோ காலில் ஆடையின்றி பேச வைத்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் புகைப்படத்தை வைத்து போலி இன்ஸ்டா பக்கத்தை உருவாக்கி, அந்த மாணவியின் தம்பியை தொடர்பு கொண்டுள்ளார். மாணவி வீடியோ காலில் பேசியதை பதிவு செய்து அதனை மாணவியின் தம்பிக்கு அனுப்பி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவாமல் அழிக்க தனக்கு 2 லட்ச ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டு மிரட்டிள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த தேனி சைபர் கிரைம் போலீஸார் யோகேஷ்குமாரைகைது செய்தனர். அவரிடம் செல்போனை ஆய்வு செய்தபோது, ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY