வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புகுஷிமா: ஜப்பானில்,உள்ள புகுஷிமா அணுமின் நிலைய கதிரியக்க கழிவு நீரை கடலில் கலக்க துவங்கியிருக்கிறது. இது சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஜப்பானில் இருந்து வரும் கடல் வகை உணவு மற்றும் தாவரங்களுக்கு சீனா தடை போட்டது.
சர்வதேச அளவில் எப்போதும் எதிர்ப்பை எதிர்நோக்கி வரும் ஜப்பானின் அணு மின் நிலையத்திற்கு தற்போது புதிய எதிர்ப்பு உருவாகி உள்ளது. இது வரை கடலில் திறந்து விடாத கழிவுகள் ஒரு சொற்ப அளவை திறந்து விட முடிவு செய்து செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புகுஷிமா ஒட்டிய பகுதிகளில் கடல் வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும்.
கழிவு திறப்பு குறித்து டெப்கோ நிறுவனம் கூறியிருப்பதாவது: மிக குறைந்த அளவே கழிவு திறக்கப்பட்டிருப்பதாகவும், அரசின் அனுமதிக்கு பிறகே வியாழக்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
முதல் நாடாக சீனா தனது அதிருப்தியை வெளிக்காட்டி உள்ளது. இந்நாட்டு வெளியுறவு துறை செயலர் வாங்க்வென்பின், ஜப்பானை கடுமையாக சாடியுள்ளார். பசிபிக் கடல் பகுதியில் அணு கழிவுநீர் திறப்பது பொறுப்பற்ற செயல். ஜப்பானின் சுயநலம். கழிவுநீர் எந்த அளவிற்கு சுத்திகரிக்கப்பட்டுள்ளது என்பதில் பெருத்த சந்தேகம் உள்ளது. கதிரியக்க மாசு ஏற்படும். கடல் என்பது சர்வதேச அளவில் மனிதகுலத்திற்கு பொதுவான சொத்து. ஒரு இயற்கை அழிவுக்கு செல்வதை அனுமதிக்கக்கூடாது. ஜப்பான் கடல்வகை உணவு வகைகளுக்கு இறக்குமதிக்கு தடை விதித்துள்ளோம். என கூறியுள்ளார்.
தென் கொரியாவில் போராட்டம்
சீனாவின் நடவடிக்கையை கண்டித்து தென் கொரிய தலைநகர் சியோலில் ஜப்பான் தூதரகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement