வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஏதென்ஸ்: கிரீஸ் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, கிரீஸ் சென்றடைந்தார் பிரதமர்.தலைநகர் ஏதென்ஸ் நகரில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னை வரவேற்க காத்திருந்த இந்தியர்களை சந்தித்தார்.
பின்னர் கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகியை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு, ராணுவம், விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையேயான நட்புறவு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக கிரீஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.இந்தியா வருமாறு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதனை கிரீஸ் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement