'புரட்சி' என்கிற சொல்லே கேவலமாகிவிட்டது.. எடப்பாடி பழனிசாமியை சீண்டிய சீமான்

சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டம் கொடுக்கப்பட்ட நிலையில், “தமிழ்நாட்டில் ‘புரட்சி’ என்கிற சொல்லே கேவலப்பட்டு போய்விட்டது” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

கூறியிருப்பது அதிமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.

அதிமுகவின் மாநில மாநாடு அண்மையில் மதுரையில் நடைபெற்றது. தென் மாவட்ட மக்களின் ஆதரவை பெறுவதற்காக, குறிப்பாக முக்குலத்தோர் மக்களை குறிவைத்து இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்கிற பட்டத்தை அதிமுக நிர்வாகிகள் வழங்கினர். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா என்ற அடைமொழியின் வரிசையாக ‘புரட்சித் தமிழர்’ என்ற பட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அடைமொழி வழங்கப்பட்டது தொடர்பாக சீமானிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:

எனக்கு தெரிந்த ஒரே புரட்சித் தமிழன் எங்க அண்ணன் சத்யராஜ் தான். நாங்க அவரை அப்படித்தான் அழைப்போம். அவர் என்ன புரட்சித் தமிழனா என்று கேட்டால் ஆமாம், உண்மையாகவே அவர் புரட்சித் தமிழன் தான்.

ஐயாவுக்கு இப்போ இந்தப் பட்டத்தை கொடுத்துருக்காங்க. பெயருக்கு முன்னாடி புரட்சி, வறட்சினு ஏதாவது போட்டுக்க வேண்டியதுதானே..புரட்சி என்ற சொல் எவ்வளவு கேவலப்பட்டு போயிருச்சு தமிழ்நாட்டுல.. சரி, ஐயா புரட்சித் தமிழரா இருக்க விரும்புறாரு. அவரை வாழ்த்த வேண்டியது தான். இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.