மகளிர் உரிமைத் தொகை – இறுதி செய்யப்படும் ஒரு கோடி பேர் பட்டியல்! யார் யாருக்கு வாய்ப்பு?

பெண்களின் முன்னேற்றத்திற்காக மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இந்நிலையில் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் அரசு ஊழியர்களும் தன்னார்வலர்களும்.

மகளிர் உரிமைத் தொகை -ஆவணங்கள் சரிபார்ப்பு!மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆனால் இதுவரை 1 கோடியே 63 லட்சம் வரை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், 63 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு தகுதியானவர்களை மட்டும் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆவணங்களை சரிபார்க்கும் பணி ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வந்தது.

வீடுகளில் கள ஆய்வு!தற்போது விண்ணப்பங்கள் பதிவேற்றும் போது விண்ணப்பதாரர்களால் கொடுக்கப்பட்ட விவரங்கள் சரியானது தானா என்று வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே விண்ணப்பங்களை பதிவு செய்ததில் தன்னார்வலர்களை பயன்படுத்தியது போல் இந்தப் பணியிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அரசு ஊழியர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட பட்டியல் – டார்கெட்!தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. திட்டம் செயல்படுத்துவதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாள்களில் இந்த பணிகள் நிறைவடைந்து இந்த மாத இறுதிக்குள் பயனாளர்கள் குறித்த முதற்கட்ட பட்டியல் தயார் செய்யப்படும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
குறுஞ்செய்தி மூலம் உறுதிப்படுத்த திட்டம்!அந்தப் பட்டியல் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். இறுதிப் பட்டியலில் இடம்பெறுபவர்களுக்கு அவர்கள் வழங்கிய அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உறுதி செய்யப்படும். அவர்களது வங்கி கணக்கு எண் சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பது சோதிக்கப்படும். செப்டம்பர் 15க்குள் மொத்த பணிகளும் நிறைவடைந்து அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்கிறார்கள்.

மாநிலம் முழுவதும் பணிகள் ஒருங்கிணைப்பு!​​
தமிழ்நாடு அளவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இந்த திட்டம் செயல்படுத்துவதில் மாநில கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிறதுறை அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். திட்டம் அமலுக்கு வந்த பின்னர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மட்டுமே ஒவ்வொரு மாதமும் பணம் வழங்கும் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளது என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.