10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை… சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் பெரும்பாலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்தது. சென்னை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை வில்லிவாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை

இதேபோல் சோளிங்கர், திருத்தணி, ஆற்காடு, பொன்னேரி ஆகிய பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று முதல் ஒன்றாம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் வானிலை மையம் அறிவித்தது போலவே நேற்று இரவில் இருந்து நல்ல மழை பெய்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.