ஆர்கே செல்வமணிக்கு பிடிவாரண்ட்

அவதூறு வழக்கில் ஆஜராகாத இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜாவின் கணவரான இவர், தற்போது பெப்சி அமைப்பின் தலைவராக உள்ளார். கடந்த 2016ல் ஒரு பேட்டியில் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போரா குறித்து சில அவதூறு கருத்துகளை செல்வமணி கூறினார். இதனால் அவர் மீது வழக்கு தொடர்ந்தார் முகுந்த் சந்த் போரா. இவர் மறைவுக்கு பின் இவரது மகன் இந்த வழக்கை நடத்தி வந்தார்.

இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு இன்று(ஆ., 28) விசாரணைக்கு வந்தபோது செல்வமணி தரப்பில் அவரோ, அவர் சார்பில் வக்கீலோ யாரும் ஆஜராகவில்லை. இதனால் செல்வணிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.