பழனி பழனிமலையில் உள்ள முருகன் கோவிலில் மொபைல்கள் மற்றும் வீடியோ சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளனது. பழனிமலைக் கோவில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும் இந்த பழனி முருகன் கோவிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்குச் சென்று வருகின்றனர். பழனியில் வாரவிடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட […]
