மாணவர்களுக்கு அறிவு ஒளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். இவர்களின் சேவையை பாராட்டுதல், அவர்களின் பொறுப்புகளை உணர செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் அக்., 5ல் உலக ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா சூழலிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர். ‘நாம் விரும்பும் கல்விக்கு ஆசிரியர்கள் தேவை’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் சிறந்த நபராக மாணவர்களை மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர்களும் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement