பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், அந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில துணை முதல்வராக சிவக்குமார் பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் உள்ளன. இதுதொடர்பைக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை பல முறை சோதனைகளை நடத்தி உள்ளது. ஏற்கனவே […]