மொபைல் செயலியை இப்போது அனைத்து தேவைக்கும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்பு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, கொரோனா காலத்தில் நடிகைகள் மூலம் ஆபாச வீடியோ எடுத்து, மொபைல் செயலி மூலம் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தார். இந்த வழக்கில் அவர் கைதும் செய்யப்பட்டார். இப்போது சிலர் மொபைல் செயலியில் ஆபாச வீடியோக்களை நேரடியாகவும் ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துள்ளனர். மும்பையை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட மொபைல் செயலியில் ஆபாச வீடியோக்கள் நேடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆபாச வீடியோக்களை நேரடியாக மொபைல் செயலியில் ஒளிபரப்பு செய்ய 1,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாய் கட்டணமாக வசூலிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்தி மும்பை அந்தேரி வர்சோவா சார் பங்களா பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் போலீஸார் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் தனிஷா, ருத்ரா ராவத், ஆரிப் கான்என மூவர் கைது செய்யப்பட்டனர். இதில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரும் மொபைல் செயலில் பணத்திற்கு தக்கபடி லைவாக ஆபாச காட்சிகளில் நடித்தபடி ஒளிபரப்பியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனிஷாவின் வீட்டில் இருந்தபடி அவர்கள் ஆபாச வீடியோ காட்சிகளில் நடித்த போது அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளனர். ஆபாச வீடியோவில் நடித்த படியே, வீடியோவை பார்க்க பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்யும்படி மூன்று பேரும் கேட்டுக்கொண்டதாக விசாரணையில் ஈடுபட்ட போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.