தீபாவளியை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.490 வழங்கப்படும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி,

நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு, புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில்ரூ .490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது

3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.490 வழங்க ரூ. 16.53 கோடி புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.