அமிர்தசரஸ்: இந்திய எல்லையில் ஊடுருவிய பாக்., ட்ரோன் இடைமறித்து செயல் இழப்பு செய்யப்பட்டது. போதை பொருள் கடத்தல்காரர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் திண்டிவாலா கிராமம் அருகே இந்திய எல்லைக்குள் ஆள் இல்லா ட்ரோன் வந்தது. இதனை பார்த்த பாதுகாப்பு படையினர் இடைமறித்து தரையில் விழ செய்தனர்.
ஒரே வாரத்தில் ட்ரோன் ஊடுருவல் 3 முறை நடந்திருக்கிறது. இதில் ஒரு ட்ரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement