சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இது அவரது ரசிகர்களுக்கும், தேமுதிகவினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வருவதுடன் ஓய்வு எடுத்து வந்தார். அவ்வப்போது வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 18ம் தேதி விஜயகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, […]
