கடந்த சில வருடங்களாகவே தேமுதிக தலைவரான விஜயகாந்த் உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கூட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டதாக வதந்திகளும் பரவின. அப்போது தேமுதிக பொருளாளரும், விஜயகாந்த்தின் மனைவியுமான பிரேமலதா வீடியோ மூலம் விஜயகாந்த் நலமாக இருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் சென்னை திருவேற்காட்டில் இன்று தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனமும் செய்யப்பட்டார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பார்த்த மக்கள் உற்சாகம் அடைந்திருந்தாலும் சிலர் வேதனையும் அடைந்தனர்.
காரணம் கூட்டம் நடக்கும் இடத்திற்கு ரோலிங் சேரில், மாஸ்க் அணிந்தபடி வந்திருந்தார். விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பலரும் வருத்தப்பட்டனர். இந்நிலையில் ‘மெரினா’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ் விஜயகாந்த் குறித்து தனது ‘ x’ வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட் டிருக்கிறார்.

கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு ,
இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை
அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please …
பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘
இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு https://t.co/roZTHx7btB— Pandiraj (@pandiraj_dir) December 14, 2023
அந்தப்பதிவில் “ கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ். பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” என்று வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார்.