“நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் நான் நிற்கிறேனா?!” – டி.டி.வி.தினகரன் பதில்

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் பத்து மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தினகரனுக்கு தாரை தப்பட்டை முழங்க முளைப்பாரி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி.தினகரன்

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது, “வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் தொகுதியில் நான் நிற்பதாகக் கூறுவது யூகத்தின் அடிப்படையிலான தகவல். வருகிற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி.க்களை இடை நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. காவிரி என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்னை. மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் இது சட்டத்துக்கு புறம்பானது” என்றார்.

அ.ம.மு.க நிர்வாகிகள்

பின்னர் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடையே தினகரன், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியதாக சொல்லபட்டது. அது தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், “எடப்பாடி பழனிசாமி ஒன்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கிடையாது. அவரிடத்தில் இருப்பதால் இரட்டை இலை சின்னம் மவுசை இழந்து விட்டது. அ.ம.மு.க நிர்வாகிகள் உண்மையாக உழைத்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி அ.ம.மு.க ஒரு கட்சியே கிடையாது என்கிறார்.

அப்புறம் ஏன் அ.ம.மு.கவில் இருந்து சென்ற நிர்வாகிகளுக்கு அ.தி.மு.கவில் முக்கியத்துவம் கொடுத்து பெரிய பதவிகள் வழங்குகிறார். தேனி, உசிலம்பட்டி பகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை. அதனால் பெரிய அளவில் செலவு செய்து நிர்வாகிகளை அழைத்து செல்கிறார். அ.ம.மு.கவில் இருந்து சென்றவர்களை பற்றி கவலைபடவில்லை. இது போல் இன்னும் பல நிர்வாகிகளை நாம் உருவாக்குவோம்.

டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.கவில் இருக்கும் நிர்வாகிகள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் அவர்கள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுப்பேன். எல்லோரும் இணைந்து கிளை கழகம், பூத் கமிட்டி அமைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக இருங்கள். நம்மிடத்தில் பணம் இல்லை, ஆனால் நம்மிடம் உண்மையாக உழைக்க கூடிய நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கின்றனர் இனி நமக்கு வெற்றி தான்” என்றதாக தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.