லிபியா நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 61 அகதிகள் உயிரிழப்பு

திரிபோலி,

உலகில் மிக ஆபத்து நிறைந்த புலம்பெயர் வழிகளில் ஒன்றாக மத்திய தரைக்கடல் பகுதி நீடித்து வருகிறது. இந்த நிலையில் லிபியாவின் ஜ்வரா நகரில் இருந்து படகு ஒன்றில் 86 பேர் அகதிகளாக புறப்பட்டனர். அவர்களுடைய படகில் பெண்கள், குழந்தைகள் என பலர் பயணித்து உள்ளனர்.

இந்நிலையில், திடீரென படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்த பலர் நீச்சல் தெரியாமல் தவித்தனர். சிலர் கடலில் குதித்து நீந்தி கரைக்கு சென்றனர்.

எனினும், அகதிகளில் 61 பேர் நீரில் மூழ்கி விட்டனர் என லிபியாவில் உள்ள சர்வதேச அகதிகளுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.

இத்தாலி நாட்டின் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் செல்வதற்கான முக்கிய புறப்படும் இடங்களாக லிபியா மற்றும் துனீசியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த இரு நாடுகளில் இருந்தும் 1.53 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலிக்கு நடப்பு ஆண்டில் வருகை தந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் முகமை தெரிவிக்கின்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.