இந்தியா கூட்டணி சார்பில் வரும் 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்: காங். தலைவர் கார்கே

புதுடெல்லி,

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட கூட்டணியில் அங்கம் வகிக்கும் 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

இந்தியா கூட்டணி சார்பில் டிசம்பர் 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும். கட்டடம் திறப்புக்கு செல்லும் பிரதமர் மோடி நாடாளுமன்றம் வர மறுக்கிறார். நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் என்ன தவறு உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.