கெய்ரோ, மேற்காசிய நாடான எகிப்தில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த 10 — 12ம் தேதி வரை நடந்தது.
இதில் தற்போதைய அதிபராக உள்ள அப்தெல் பதா எல்சிசியை எதிர்த்து, குடியரசு கட்சியின் ஹசெம் உமர், எகிப்திய ஜனநாயக கட்சியின் பரித் சஹ்ரான், லிபரல் கட்சியின் அப்தெல் சனத் யமாமா ஆகியோர் போட்டியிட்டனர்.
நான்கு முனை போட்டி நிலவினாலும், எல்சிசி தான் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இதில் எல்சிசிக்கு ஆதரவாக 89.6 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து நாட்டின் அதிபராக, மூன்றாவது முறையாக அவர் பதவியேற்க உள்ளார். இந்த தேர்தல் வெற்றிக்கு, பிரதமர் மோடி உட்பட சர்வதேச தலைவர்கள் எல்சிசிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement