டெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா (கோவிட்-19) துணை மாறுபாட்டான ஜேஎன்.1 (JN.1)இன் பாதிப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 614 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 3 மாநிலங்களில் 20 பேர் ஜேஎன்.1 தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை 28 ஆக இருந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தற்போது 78 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதிய கொரோனா […]
