உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய வலய மற்றும் ஜெனீவா அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்ட கலந்துரையாடல் தொடர்பாக துறை சார்ந்தவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, ஆறு, ஒன்பது மாதங்களுக்கு இடைப்பட்ட பிள்ளைகளுக்கு அம்மைத் தடுப்பு மருந்து வழங்கும் விசேட நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால தெரிவித்தார்.
டெங்கு மற்றும் அம்மை நோய்களை ஒழிக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்களுடனான விசேட சந்திப்பொன்று (27) சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சின் செயலாளர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய விசேட வைத்தியர் பாலித மஹீபால;
இவ்வேலைத்திட்டம் 2024 ஜனவரி 06 சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை அருகிலுள்ள மருத்துவ நிலையங்களில் இடம்பெறவுள்ளதாகவும் இதற்காக 09 மற்றும் 15 மாதங்களுக்கிடைப்பட்ட சகலருக்கும் அம்மைத் தடுப்பு மருந்து கிடைக்கப்பெறாதிருந்தால் அவர்களுக்கு அம்மை நோய்த் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
அதைவிட ஜனவரி மூன்றாம் வாரம் மீண்டும் இந்நிகழ்ச்சித் திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர், இதன் அம்மை நோயாளர்களின் எண்ணிக்கையை குறைத்து உலகளாவிய மற்றும் பிரந்திய ரீதியாக உலக சுகாதார அமைப்பினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கிணங்க செயற்படுவதுடன் நமது நாட்டின் அம்மை நோயை இல்லாது செய்வதாகவும் வலியுறுத்தினார்.
இரண்டு மாத காலத்திற்குள் அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளமையினால் பூரணமாக இல்லாது செய்வதற்கு முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால சுட்டிக்காட்டினார்.
இலங்கை அம்மை நோயை ஒழித்த நாடாக 2019ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு நமது நாட்டிற்கு சான்றிதழ் வழங்கியதாகவும், அச்சான்றிதழ் பிராந்தியத்தில் 03 நாடுகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டதுடன் அவற்றில் இலங்கையும் ஒன்று என்றும் செயலாளர் நினைவூட்டினார்.
உலகம் முழுவதும் நோய்த் தடுப்பு மருந்தேற்றல் நிழ்ச்சியில் நூறு (100%) வீதம் இலங்கை வெற்றி பெற்ற நாடு என்றும் மேலும் அவர் வலியுறுத்தினார்.