சென்னை: விஜயகாந்தின் மறைவு குறித்து அவரது மகன் சண்முக பாண்டியன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே அவர் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. இதன்பின் அவர் நலமுடன் இருப்பதாக பிரேமலதா வீடியோ வெளியிட்டு இருந்தார்.