உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் ‛வாழை'

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் வாழை. இந்த படம் சிறுவர்களை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த மாரி செல்வராஜ் தற்போது தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

வாழை படத்தை தனது சிறு வயதில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ் . அதாவது, வாழைத்தார் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் நிறைய பேர் இறந்து போன சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. அந்த லாரியில் சிறுவயதில் மாரி செல்வராஜூம் பயணித்து உயிர் தப்பி இருக்கிறார். அந்த விபத்தில் அவரது சில உறவினர்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் வாழை படத்தை இருக்கியிருக்கிறாராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.