சென்னை: தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களுக்காக பகலிலும் பேருந்துகளை இயக்க தயார் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு 12மணி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏ.ஐ.டி.யு.சி, டி.டி.எஸ்.எப், பி.எம்.எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால், ஆளும் கட்சி தொழிற்சங்கமான, தொ.மு.ச., காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி போன்ற தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று அறிவித்து உள்ளது. […]
