சென்னை போக்குவரத்துத் துறை அமைச்சர் வரும் 19 ஆம் தேதி மீண்டும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நேற்று முதல் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் பேசியதை அடுத்து போக்குவரத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம, ”தமிழக முதல்வரின் அறிவுரையை பெற்று தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் ஏற்கனவே 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகள் நிதி நிலையைப் […]
