`இப்போதும் நினைவில் இருக்கிறாள்; Bright Student' – மகனைக் கொன்ற பெண் சிஇஓ குறித்து பேராசிரியர்கள்

கோவாவுக்கு தனது 4 வயது மகனுடன் சென்ற பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத், தனது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை பேக்கில் எடுத்துச்சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டு, கோவாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரித்த போது, மகனை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொள்ள முயன்றது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

காவல்துறை

இந்த நிலையில், சுசனா சேத் கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கியவர் என அவரின் ஆசிரியர்கள் தெரிவித்திருக்கின்றனர். சுசனா சேத், கல்கத்தாவின் Bhawanipur Education Society கல்லூரியில் இயற்பியல் துறை படித்திருக்கிறார். சுசனா சேத் குறித்து அவரது துறைப் பேராசிரியர் ஒருவர் பேசுகையில், “எனக்கு இப்போதும் அந்தப் மாணவி நினைவில் இருக்கிறாள். பிரைட் ஸ்டூடெண்ட். ராமன்‌ ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்திருந்தாள். ஒரு கல்லூரி மாணவி அதுபோன்ற ஆராய்ச்சி நிறுவனத்தை அடைவது எளிதான காரியமல்ல.

நாங்கள் எங்களுடைய பழைய மாணவர்களுக்கான சங்கம் ஒன்றை வைத்திருக்கிறோம். ஆனால் அவர் அந்த சங்கத்துடன் எந்த தொடர்பிலும் இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மற்றோரு ஆசிரியர்,“”சுசானா என்னிடம் 2007-2008-ம் ஆண்டில் பயின்றார். படிப்பில் கண்ணும் கருத்துமாக இருப்பார். அவர் இப்படி ஒரு‌ கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்‌ என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து விட்டேன்” எனத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.