கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் பொதுமக்களுக்கான சேவையினை வினைத்திறனாக வழங்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப செயற்திட்டத்திற்கு UNDP நிறுவனம் நிதியுதவி.

மாவட்டச்செயலகத்தின் வரவேற்பு கருமபீடத்தில் பொதுமக்களுக்கான சேவையினை வினைத்திறனாக வழங்கும் பொருட்டு மாவட்டச்செயலகத்தினால் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயற்திட்டத்திற்கு தேவையான சாதனங்களை UNDP நிறுவனம் வழங்கியுள்ளது.

இவ் உபகரணங்களை UNDP நிறுவன அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள்,UNDP நிறுவன அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள்,மாவட்டச்செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் செயற்திட்டத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

 

மாவட்ட ஊடகப்பிரிவு,
மாவட்டச்செயலகம்,
கிளிநொச்சி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.