போகி பண்டிகை காரணமாக சென்னையில் மோசமான அளவில் காற்று மாசு – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: ஜன.13 காலை 8 மணி முதல் ஜன.14 காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில், சென்னையில் குறைந்தபட்சமாக அண்ணாநகரில் 131 ஆகவும் (மிதமான அளவு) அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 270 ஆகவும் (மோசமான அளவு) இருந்தது என கண்டறியப்பட்டது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"போகி பண்டிகையின் போது, நகரவாசிகள் ரப்பர் டயர்கள், டியூப்கள், பாய், கம்பிகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்த வெப்பநிலை முன்னிலையில் குடியிருப்பாளர்களால் கொளுத்தப்படும் நெருப்பு, புகை மூட்டத்தை ஏற்படுத்துகிறது, இது பல்வேறு சுகாதார கேடுகளை ஏற்படுத்துகிறது. அதோடு, வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் மற்றும் இடையூறை ஏற்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.