பீஜிங்:சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நான்யாங்கில் உள்ள யான்ஷான்பு கிராமத்தில் உள்ள இங்காய் துவக்க பள்ளியின் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகினர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement