ரோடு டிராவல் கதையில் நடிக்கும் பகத் பாசில், வடிவேலு

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'மாமன்னன்' படத்திற்கு பிறகு மீண்டும் பகத் பாசில், வடிவேலு இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் வி. கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படமாக உருவாகிறது .

இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது. தற்போது இதன் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இது பகத் பாசில், வடிவேலு இருவரும் ரோடு டிராவலில் முழுக்க முழுக்க பயணிக்கிற கதை என்கிறார்கள். இதில் சில அரசியல்களும் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.