பிரதமர் நரேந்திர மோடி பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதனால் அவர் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தமாட்டார் என்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து திங்களன்று மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டியதோடு, தான் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் […]
