“இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக” பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களில் சிலர் ரஷ்யாவில் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏஜெண்டுகளால் தூண்டப்பட்டு ரஷ்யா சென்று சிக்கிய உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா திரும்ப அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர். இதுகுறித்து தி இந்து நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில், நவம்பர் 2023 முதல், ரஷ்யா-உக்ரைன் எல்லையில் உள்ள மரியுபோல், கார்கிவ், டொனெட்ஸ்க், ரோஸ்டோவ்-ஆன்-டான் ஆகிய இடங்களில் சுமார் 18 இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர், மேலும் நடந்து வரும் […]