“நான் குடிப்பதும் யமுனை நீர்தான்!” – பிரச்சாரத்தில் கேஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி: யமுனை நதியை ஹரியானா விஷமாக்கி விட்டது என்ற டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். மேலும், “நான் உட்பட டெல்லியில் உள்ள அனைவரும் ஹரியானா அனுப்பும் யமுனை நீரைத்தான் குடிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். டெல்லியின் கர்தார் நகரில் நடந்த பேரணிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், “டெல்லியின் முன்னாள் முதல்வர் ஒருவர் ஹரியானா மக்கள் மீது அருவருக்கத்தக்க குற்றச்சாட்டினைச் சுமத்தியுள்ளார். தோல்வி பயத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் … Read more

பக்தர்களுக்கு கும்பமேளாவில் பாதுகாப்பை உறுதி செய்ய பிரியங்கா அறிவுறுத்தல்

டெல்லி பிரியங்கா காந்தி கும்பமேளாவில் பகதர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இiது கடந்த 14ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று அமாவாசை என்பதால் மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலருக்கு … Read more

ஏடிஎம் கொள்ளை கும்பலின் முக்கிய நபர் கைது

புது டெல்லி பல்வேறு எடிஎம் எந்திரங்களில் கைவரிசை காட்டிய பிரபல பரூக் கொள்ளை கும்பலின் 32 வயது முக்கிய நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியான ஜாஹித் அரியானாவின் மேவாட்டைச் சேர்ந்தவர். இவரது குற்றப்பதிவில் டெல்லி, அரியானா, மராட்டியம், ஒடிசா, மற்றும் சென்னை போன்ற இடங்களில் உள்ள ஏடிஎம் திருட்டுகள் மற்றும் ஆயுதக் கொள்ளை தொடர்பான 35க்கும் மேற்பட்ட வழக்குகள் அடங்கும். மேலும் இவர் பாதுகாப்பற்ற ஏடிஎம்களை குறிவைத்து, கட்டர் எந்திரங்களைப் பயன்படுத்தி சில … Read more

ஐசிசி தரவரிசை: இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி முன்னேற்றம்

சென்னை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் அவர் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் .வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைன் … Read more

ஆப்பிரிக்க நாட்டில் சிறையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்

கின்சாசா, கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது சிறை காவலர்களுக்கும், … Read more

`வேங்கைவயல் பிரச்னையில் பழனிசாமி ஏன் போராடவில்லை?’ – கேள்வி எழுப்பும் தொல்.திருமாவளவன்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆதிதிராவிடர் நலப்பேரவையின் சார்பில் நடைபெறும் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சீமான் பரபரப்புக்காக ஏதோ பேசுகிறார். இது காலப் பொருத்தம் இல்லாதது… கருத்தியல் பொருத்தம் இல்லாதது… அரசியல் பொருத்தம் இல்லாதது. மாறாக, கவன ஈர்ப்புக்காக, பரபரப்புக்காக தன்னை நம்பி … Read more

‘பெரியாறு அணை வலுவாக உள்ளது’ – உச்ச நீதிமன்ற கருத்துக்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு

குமுளி: முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அணை உடைந்து விடும் என்பது கற்பனை கதை போலவே உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை தமிழக விவசாயிகள் வரவேற்றுள்ளனர். முல்லை பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும், அணை பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல மனுக்கள் கேரளாவில் இருந்து தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான … Read more

‘இஸ்ரோவின் 100-வது ராக்கெட்: இந்திய விண்வெளி பயணத்தின் மிகப் பெரிய சாதனை’

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது மற்றொரு மைல்கல் மட்டுமல்லாமல், இந்தியாவின் விண்வெளி பயணத்தில் மிகப் பெரிய சாதனை என்று மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100-வது ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை செலுத்தப்பட்டது. இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ள ஜிதேந்திர சிங், “ஜி.எஸ்.எல்.வி-எஃப் 15 / என்.வி.எஸ் -02 மிஷன் செலுத்தப்பட்டது மற்றொரு மைல்கல் மட்டுமல்ல; இது இந்திய … Read more

Mysskin : `மிஷ்கின் பேசியதில் தவறில்லை; கெட்டவார்த்தை பேசுறவன் கெட்டவனா?' – சமுத்திரக்கனி

‘பாட்டல் ராதா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின், வன்மையான வார்த்தைகளைப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இளையராஜாவின் இசையை வர்ணித்துப் பேசுகையில் இளையராஜாவை ‘அவன், இவன்’ என மிஷ்கின் பேசியதையும் பலரும் கண்டித்திருந்தனர். மேடை நாகரிகத்துடன் மிஷ்கின் பேச வேண்டும் என்று பலரும் எடுத்துரைர்த்தனர். பிறகு, வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘Bad Girl’ படத்தின் பத்திரிகையாளர் சந்த்திப்பில் கலந்து கொண்ட மிஷ்கின், தான் பேசியதற்கு பகிரங்க மன்னிப்பும் கேட்டிருந்தார். மிஷ்கின் இதையடுத்து மிஷ்கின் பேசிய வார்த்தைகள் … Read more

மகா கும்பமேளாவில் பக்தர்கள் மரணம் : மாயாவதி துயரம்

லக்னோ மகா கும்பமேளாவில் பகதர்கள் மரணம அடைந்தத/ற்கு துயரடைந்ததாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார் தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இiது கடந்த 14ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று அமாவாசை என்பதால் மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் … Read more