15 வீடுகளில் என்ஐஏ ரெய்டு… பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பா? – சீர்காழியில் பரபரப்பு

TN Latest News Updates: சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் என்ஐஏ (NIA) அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

Shah Rukh Khan: `கிங்' – ஷாருக் கானுடன் இரண்டாது முறையாக இணையும் இயக்குநர்

ஷாருக் கானுக்கு ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு கடந்த 2023-ம் ஆண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாகின. `பதான்’, `ஜவான்’, `டங்கி’ என வெளியான மூன்று படங்களுக் ஹிட்டடித்து வசூலை அள்ளின. இதன் பிறகு, கடந்த 2024-ம் ஆண்டு இவர் நடிப்பில் எந்தத் திரைப்படமும் வெளியாகவில்லை. ஆனால், இவர் அடுத்ததாக நடிக்கப்போகும் திரைப்படங்கள் குறித்தான செய்திகள் மட்டும் கிசு கிசு-வாக பேசப்பட்டு வந்தது. எத்திரைப்படமும் வெளியாகவில்லை என ரசிகர்களிடம் ஏக்கம் இருந்த சமயத்தில் `கொஞ்சம் இருங்க பாய்’ மொமன்ட்டைப் … Read more

இஸ்ரோவின் 100 ஆவது : கவுண்ட் டவுன் தொடக்கம்

ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை ஏவும் பணியின் கவுண்ட் டவுனை இன்று தொடக்கி உள்ளது. ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உள்ளதன் மூலம் இஸ்ரோ, தனது 100-வது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வரலாறு படைக்க தயாராகி வருகிறது. நாளை காலை 6.33 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து … Read more

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐயால் மட்டும்தான் சரியான நீதியை பெற்றுத்தர முடியும் – எல்.முருகன் கருத்து

திருச்சி: வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐயால் மட்டும்தான் சரியான நீதியை பெற்றுத்தர முடியும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரை மேலூர் டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே 2017 முதல் கடிதப் போக்குவரத்து இருந்துள்ளது. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதன்பிறகு இந்த விவகாரம் வேகம் எடுக்கத் தொடங்கியது. திமுக அரசு ஒருமுறை கூட இத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என … Read more

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமல்

டேராடூன்: நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அதிகாரபூர்வ இல்லமான முக்கிய சேவக் சதன் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், உத்தரகண்ட் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்டத்தின் அரசாணையை வெளியிட்டதோடு, பொது சிவில் சட்ட விதிகளை அறிமுகம் செய்தார். பொது … Read more

வங்கதேசத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவையடுத்து வங்கதேசத்துக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். முதல் நாளிலேயே உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது உட்பட் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். இதுபோல வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி மற்றும் பல்வேறு சர்வதேச நிதியுதவி திட்டங்களையும் 90 நாட்களுக்கு நிறுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல், எகிப்து நாடுகளுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வெளிநாட்டு … Read more

சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை,திருவள்ளூர் மாவட்டம்

சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை,திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் மகளை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு வள்ளி என பெயர் சூட்டி வளர்த்து வந்தான். வள்ளி தினைப்புனத்தைக் காவல் காக்கும் பணியைச் செய்து வந்தாள். தினைப்புனம் என்பது உலகத்தையும், அதில் விளையும் தினைப்பயிர் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் “உலகப்பற்று” எனப்படும் ஆசையையும் குறிக்கும். “இது உனக்குச் சொந்தமானதல்ல; எனக்குச் சொந்தம்” என்று … Read more

பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக வேண்டும்: சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம்

கடலூர்: ‘பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வர வேண்டும்’ என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார். சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் கலாச்சார மையம் சார்பில் சுவாமி சகஜானந்தாவின் 135-ம் ஆண்டு பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது: இந்த மண் சிவன் பிறந்த மண். சுவாமி சகஜானந்தா தோன்றிய காலத்தில் இரண்டு சக்திகளை எதிர்கொள்ள வேண்டும். அதில் ஒன்று கடவுள் இல்லை என்கிற சக்தி. … Read more

குடியரசு தின விழாவுக்கு போதையில் வந்த தலைமை ஆசிரியர் கைது

பாட்னா: பிஹாரின் முசாபர்பூர் மாவட்டம் மினாப்பூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், தேசியக்கொடி ஏற்ற மேடைக்கு தலைமை ஆசிரியர் அழைக்கப்பட்டபோது, தலைமை ஆசிரியர் சஞ்சய் குமார் தடுமாறியபடி வந்தார். கொடி ஏற்றும்போது தள்ளாடினார். இதுகுறித்து கிாரம மக்கள் உள்ளூர் எம்எல்ஏ ராஜீவ் குமார் மற்றும் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸார் சஞ்சய் குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று கைது செய்தனர். … Read more