Unified Digital ID System: புதிய அரசாங்க போர்டல்… Aadhaar, PAN, Voter ID அனைத்தையும் ஒரே இடத்தில் அப்டேட் செய்யலாம்

Unified Digital ID System: நாட்டின் கோடிக்கணக்கான குடிமக்களுக்கு மிகவும் நிம்மதியான மற்றும் சிறந்த செய்தி வந்துள்ளது. இப்போது உங்கள் முக்கியமான அடையாள ஆவணங்களான ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் பெயர், முகவரி அல்லது மொபைல் எண் போன்றவற்றை எளிதாக மாற்ற முடியும். மக்களின் செயல்முறைகளை எளிதாக்க மத்திய அரசு ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Central Government: மத்திய அரசின் புதிய திட்டம்

மத்திய அரசு ஒரு புதிய டிஜிட்டல் திட்டத்தை கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் ஒரு போர்ட்டலைத் தொடங்க உள்ளது. இதன் மூலம் உங்கள் அனைத்து முக்கிய ஆவணங்களும் 3 நாட்களில் ஒரே இடத்திலிருந்து புதுப்பிக்கப்படும்.

What is Unified Digital ID System?

ஒருங்கிணைந்த டிஜிட்டல் ஐடி சிஸ்டம் என்றால் என்ன? ‘ஒருங்கிணைந்த டிஜிட்டல் அடையாள அமைப்பு’ என்ற புரட்சிகரமான திட்டத்தை மோடி அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. இந்த போர்ட்டலின் உதவியுடன், உங்கள் ஆதார், பான், ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற அடையாள அட்டைகளை ஒன்றாக இணைக்க முடியும். மேலும் நீங்கள் ஏதேனும் ஒரு ஆவணத்தில் மாற்றங்களைச் செய்தால், மற்ற அனைத்து ஆவணங்களிலும் அந்த புதுப்பிப்பு தானாகவே செய்யப்படும். இதுவரை ஒருவர் தங்கள் பெயரைத் திருத்தவோ அல்லது முகவரியை மாற்றவோ விரும்பினால், அவர்கள் வெவ்வேறு துறைகளின் அலுவலகங்களுக்கு மீண்டும் மீண்டும் சென்று இந்த பணியை செய்ய வேண்டியிருந்தது. சில நேரங்களில் சர்வர் செயலிழந்துவிடும், சில நேரங்களில் ஆவணங்கள் முழுமையடையாமல் போகும், சில நேரங்களில் செயல்முறை மிக நீண்டதாக இருக்கும். இந்தக் காரணங்களால் திருத்தங்கள் முதலான பணிகளை செய்துமுடிக்க, மக்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த புதிய போர்டல் இந்த பிரச்சனைகளை அகற்றிவிடும். 

இந்த போர்டல் எவ்வாறு செயல்படும்

அரசாங்கத்தால் உருவாக்கப்படும் இந்த போர்டல், பயனர் தனது ஆவணத்துடன் தொடர்புடைய விருப்பத்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

உதாரணமாக, ஒரு பயனர் தனது மொபைல் எண்ணைப் புதுப்பிக்க விரும்பினால், “மொபைல் எண் புதுப்பிப்பு” (“Mobile Number Update”) என்ற விருப்பத்தை, அதாவது ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். முகவரியை மாற்ற விரும்பினால், அதற்கு ஒரு தனி விருப்பம் கிடைக்கும்.

இதற்குப் பிறகு, பயனர் தொடர்புடைய உண்மையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். உதாரணமாக, புதிய முகவரியை நிரூபிக்க மின்சார பில் அல்லது வாடகை ஒப்பந்தம் போன்றவை. போர்ட்டல் மூலம், உங்கள் ஆவணங்கள் மூன்று வேலை நாட்களில் புதுப்பிக்கப்படும். இதன் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது ஒரு தானியங்கி புதுப்பிப்பாக செயல்படும்.

இந்த போர்ட்டலின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு ஆவணத்தில் மாற்றங்களைச் செய்தவுடன், மற்ற அனைத்து முக்கிய ஆவணங்களிலும் அந்த மாற்றம் தானாகவே செய்யப்படும். உதாரணமாக, உங்கள் ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றினால், அதே மொபைல் எண் உங்கள் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட்டில் தானாகவே புதுப்பிக்கப்படும். இந்த வசதி கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஏனெனில் இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் செலவுகளைக் குறைத்து அரசாங்க செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும்.

இந்த போர்டல் எப்போது தொடங்கப்படும்?

இந்த ஒருங்கிணைந்த டிஜிட்டல் போர்ட்டலின் சோதனை ஓட்டம் தற்போது நடந்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் சில தொழில்நுட்ப மற்றும் சட்ட தடைகள் இருந்தன. அவற்றுக்கான தீர்வு இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது. தரவு பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பயனரின் தகவல்கள் முற்றிலும் ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் இந்த போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை சோதனை ஓட்டத்தில், இந்த போர்டல் 92% க்கும் அதிகமான துல்லியத்தை அடைந்துள்ளதாக அதிகாரிகளின் கூறியுள்ளனர். இது ஒரு பெரிய சாதனையாகும். சில மாதங்களில், இந்த வசதி சாதாரண குடிமக்களுக்காக தொடங்கப்படும். இருப்பினும், இந்த போர்ட்டலின் அதிகாரப்பூர்வ பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சோதனை முடிந்தவுடன், அதன் பெயர் மற்றும் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Digital India: டிஜிட்டல் இந்தியாவிற்கு ஏற்ற மாற்றம்

– டிஜிட்டல் இந்தியாவின் இந்த சகாப்தத்தில், அனைத்து சேவைகளும் மொபைல் அல்லது இணையத்தில் கிடைக்கும்போது, ​​அடையாள அட்டையைப் புதுப்பிக்கும் செயல்முறை இன்னும் பழைய முறையிலும் சிக்கலான நடைமுறைகளுடனும் உள்ளது.

– இதனால்தான், பொதுமக்களுக்கு அதிக வசதி கிடைக்கவும், அரசாங்க அமைப்பு துல்லியமாக, துரிதமாக, திறன் படைத்தாக மேம்படவும் இந்த புதிய போர்ட்டலைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

– இந்த நடவடிக்கை நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், மோசடியைத் தடுக்கவும் உதவும். 

– மேலும், குடிமக்களின் துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களையும் அரசாங்கம் கொண்டிருக்கும்.

– இந்த முயற்சி நாட்டின் 140 கோடி குடிமக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். 

– பொதுவாக தங்கள் ஆவணங்களை மாற்ற பல மாதங்களாக காத்திருக்கும் மக்கள் இப்போது வீட்டில் இருந்தபடீயே இந்த வேலையை 3 நாட்களில் செய்ய முடியும்.

அரசாங்கத்தின் இந்தத் திட்டம் டிஜிட்டல் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு படியாகும். இது முழுமையாக செயல்படுத்தப்பட்டவுடன், இதன் நன்மைகள் எவ்வளவு விரைவாக சாமானிய மக்களைச் சென்றடைகின்றன என்பதும், அது நம் வாழ்க்கையை எவ்வாறு எளிதாக்குகிறது என்பதும் தெரியவரும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.