அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர் 2 பேர் சுட்டு கொலை

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் வாஷிங்​டனில் உள்ள யூதர்​கள் அருங்​காட்​சி​யகத்​தில் யூதர்​கள் பங்​கேற்ற நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் அமெரிக்கா​வுக்​கான இஸ்​ரேல் தூதரக அதி​காரி​களும், ஊழியர்​களும் பங்​கேற்​றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனை​வரும் அருங்​காட்​சி​யகத்தை விட்டு வெளியே வந்​தனர்.

அப்​போது இஸ்​ரேல் தூதரக அதி​காரி​கள், ஊழியர்​களும் வெளியே வந்து வீட்​டுக்​குச் செல்ல ஆயத்​த​மாகி நின்​றனர். அப்​போது அருங்​காட்​சி​யகத்​துக்கு வெளியே நின்ற மர்ம நபர் ஒரு​வர் தூதரக ஊழியர்​களை நோக்கி ஓடிச் சென்று திடீரென்று குறிவைத்து துப்பாக்​கி​யால் சுட்​டார். இதில் சம்பவ இடத்​திலேயே இஸ்​ரேலிய தூதரக பெண் ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இவர்​கள் இரு​வருமே இஸ்​ரேல் தூதரகத்​தில் பணி​யாற்​றிய ஊழியர்​கள் ஆவர்.

அவர்​களது பெயர் யாரோன் லிஷின்​ஸ்கி மற்​றும் சாரா மில்​கிரிம் என்​பது தெரிய​வந்​தது. இவர்​கள் 2 பேரும் காதலர்​கள் என்று கூறப்​படு​கிறது. விரை​வில் திரு​மணம் செய்ய இருந்த நிலை​யில் அவர்​கள் 2 பேரும் இறந்​துள்​ளனர். அப்​போது துப்​பாக்​கிச் சூடு நடத்​திய நபர் அங்​கிருந்து தப்​பியோட​வில்​லை. அவரே, தன்னை போலீ​ஸாரிடம் அழைத்​துச் செல்​லுங்​கள் என்​றார்.

இதையடுத்து அங்கு விரைந்த போலீ​ஸார், அந்த நபரைக் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். துப்​பாக்​கி​யால் சுட்ட நபர் கூறும்​போது, “நான் இந்த சம்​பவத்தை காசா பகுதி நலனுக்​காக செய்​தேன். காசா மக்​களுக்​காகத்​தான் இதை செய்​தேன். பாலஸ்​தீனத்​துக்கு விடு​தலை வேண்​டும். பாலஸ்​தீனத்தை சுதந்​திர​மாக செயல்பட வைக்க வேண்​டும்’’ என்​றார்.

ட்ரம்ப் கண்​டனம்: இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் தளத்​தில் கூறும்​போது, இந்த இரட்​டைக் கொலைக்கு யூத விரோதம்​தான் அடிப்​படை காரணம். இந்​தச் சம்​பவத்​தோடு இதற்கு முடிவு கட்​டு​வோம். வெறுப்பு மற்​றும் தீவிர​வாதத்​துக்​கு அமெரிக்​கா​வில்​ இடமில்​லை’ என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.