இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்

புதுடெல்லி: இந்​தி​யா- பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தம் சர்​வ​தேச மத்​தி​யஸ்​தத்​தால், குறிப்​பாக அமெரிக்​கா​வின் செல்​வாக்​கால் ஏற்​பட​வில்லை என்று வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் மீண்​டும் திட்டவட்டமாக கூறினார். நெதர்​லாந்து ஊடகம் ஒன்​றுக்கு எஸ்​.ஜெய்​சங்​கர் பேட்டி அளித்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் தொடர்​கிறது. ஏனென்​றால் அந்த நடவடிக்​கை​யில் ஒரு தெளி​வான செய்தி இருந்​தது. ஏப்​ரல் 22-ம் தேதி நாம் கண்​டது போன்ற செயல்​கள் (பஹல்​காம் தாக்​குதல்) நடந்​தால், அதற்கு பதிலடி தரப்​படும் என்​பது​தான் அது. போர் நிறுத்த முயற்சி மே 10-ம் தேதி பாகிஸ்​தான் ராணுவத்​தால் தொடங்​கப்​பட்​டது. போரை நிறுத்த தயா​ராக இருப்​ப​தாக பாகிஸ்​தான் ராணுவம் ஹாட்​லைனில் கூறியது.

அதற்கு நாங்​கள் எதிர்​வினை​யாற்​றினோம். போர் நிறுத்​தம் முற்​றி​லும் இந்​தியா – பாகிஸ்​தான் பேச்​சு​வார்த்​தை​யால் ஏற்​பட்​டது. சர்​வ​தேச மத்​தி​யஸ்​தத்​தால், குறிப்​பாக அமெரிக்​கா​வின் செல்​வாக்​கால் இது ஏற்​பட​வில்​லை.அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ என்​னிடம் பேசி​னார். பிரதமர் மோடி​யிடம் துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் பேசி​னார். அவர்​களின் பங்கு கவலை தெரி​விப்​ப​தாக மட்​டுமே இருந்​தது.

அமரிக்கா மட்​டுல்ல, எங்​களிடம் பேசிய அனைத்து நாடு​களு​ட​னும் ஒரு விஷ​யத்தை நாங்​கள் தெளி​வாக கூறினோம். பாகிஸ்​தான் போர் நிறுத்​தம் செய்ய விரும்​பி​னால் அதை அந்​நாடு எங்​களிடம் சொல்ல வேண்​டும் என்​பது​தான் அது. பாகிஸ்​தான் ஜெனரல் நமது ராணுவ ஜெனரலை அழைத்து பேசிய பிறகே போர் நிறுத்த உடன்​பாடு ஏற்​பட்​டது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் தனது தலையீடு இருந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் அதனை மீண்டும் நிராகரித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.