டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து புறப்பட்டது இந்தியா 'ஏ' அணி

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது.

2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ‘ஏ’ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 2 டெஸ்ட் (4 நாட்கள்) போட்டிகளிலும், இந்திய அணிக்கெதிராக ஒரு போட்டியிலும் விளையாட உள்ளது. இந்த தொடர் மே 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய ‘ஏ’ அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா ஏ அணி இங்கிலாந்து புறப்பட்டது.

இந்திய ‘ஏ’ அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம்:-

அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணை கேப்டன்) (வி.கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்குர், இஷான் கிஷன் (வி.கீப்பர்), மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் காம்போஜ், அன்ஷ் கம்புஜ், அன்ஷ் கம்புஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.