இங்கிலாந்தில் ஆரம்பப் போட்டிகளில் சும்மான் கில் இல்லை? கேப்டன்சி பொறுப்பு யாருக்கு?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் சுப்மான் கில் புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வரும் ஜூன் 6-ம் தேதி பயிற்சி போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சாய் சுதர்சன் மற்றும் சுப்மான் கில் இந்தியா ஏ அணியிலும் இடம் பெற்றுள்ளனர். முன்பு ஐபிஎல் பைனல் போட்டி மே இறுதியில் நடைபெற இருந்த நிலையில், தற்போது ஜூன் மூன்றாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிங்க: இந்த தமிழக வீரரை அணியில் சேர்க்க கூடாது.. கெளதம் கம்பீர் அடம்!

இதன் காரணமாக அவர்கள் முதல் பயிற்சி போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மான் கில் உள்ளதால் அணியை வழிநடத்த இங்கு தேவைப்படுகிறார். இதன் காரணமாக இங்கிலாந்து நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் அவரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டாவது பயிற்சி போட்டியில் கலந்து கொள்வார் என்று தலைமை பயிற்சியாளர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். ஜூன் 20 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் நிலையில் அதற்கு முன்பு வீரர்களுக்கு போதிய ஓய்வு தேவை என்று பிசிசிஐ விரும்புகிறது. 

கேப்டன் சுப்மான் கில் 5 போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதால் அவருக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட உள்ளது. ஜூன் 13ஆம் தேதி இந்திய அணிகளுக்குள் வாரம் அப் போட்டிகள் நடைபெறும். மேலும் சமீபத்தில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் இங்கிலாந்து தொடருக்கான அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார். திலீப் 2021 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணியில் பணிபுரிந்து வருகிறார். ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற போது இவரும் இணைந்தார். அவருடைய இடத்தில் சரியான மாற்று பயிற்சியாளர் கிடைக்கவில்லை என்பதால் அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 

திலீப் நீண்ட நாட்களாக இந்திய அணி வீரர்களுடன் நல்ல ஒரு நட்பில் இருந்து வருகிறார். இதன் காரணமாக இங்கிலாந்து தொடரில் அவருடைய இருப்பு உதவிகரமாக இருக்கும் என்று பிசிசிஐ விரும்புகிறது. திலீப் பீல்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு போட்டிகளில் நன்றாக பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு டிரெஸ்ஸிங் ரூமில் விருதுகள் கொடுக்கும் ஏற்பாடுகளும் நடைபெற தொடங்கியது. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், மோர்னே மோர்களுடன் திலீப்பும் செல்ல உள்ளார்.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி:

ஷுப்மன் கில் (C), ரிஷப் பந்த் (WC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ்தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

மேலும் படிங்க: RCB IPL final history: ஆர்சிபி எத்தனை முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது? முழு விவரம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.