சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய விரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அப்போது தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.
“சென்னையில் 2005 ஆம் ஆண்டு நடந்த சேலஞ்சர்ஸ் டிராபியின் போதுதான் நான் முதன்முதலில் தோனியை சந்தித்தேன். நான் மும்பையிலிருந்து வந்து கொண்டிருந்தேன், அவரும் அங்கிருந்து அதே விமானத்தில் வந்திருப்பார் என்று நினைக்கிறேன். நான் எகானமி வகுப்பில் அமர்ந்திருந்தேன், அவர் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் அமர்ந்திருந்தார்.
எல்லோரும் தோனி அங்கு முன்னால் அமர்ந்திருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் நான் அவரைச் சந்திக்கத் தயங்கினேன். இப்போதும் கூட, அவரைச் சந்திக்கத் தயங்குகிறேன். ஏனெனில் அவர் நல்ல மனநிலையில் இல்லை என்றால் என்ன செய்வது என யோசிப்பேன்.ஆனால் அவர் நல்ல மனநிலையில் இல்லை என்றால் அது முகத்தில் தெரிந்துவிடும்.
அப்போது நான் சின்னப் பையனாக இருந்தேன். எனவே தோனி போன்ற ஒருவரை பார்ப்பதற்கு சற்று தயக்கமாக இருந்தது. நான் முதன்முதலில் அவரை விமானத்தில் பார்த்தபோது அவருக்கு நீளமான முடி இருந்தது. எங்க மேனேஜர் தோனியுடன் நாம் ஒன்றாகதான் ஹோட்டலுக்கு செல்ல போகிறோம் என கூறினார். நான் தயங்கினேன். எப்படி அவருடன் ஒன்றாக செல்வது என்று யோசித்தேன்.
அதிர்ஷ்டவசமாக தோனியின் மொபைல் போன் கீழே விழுந்துவிட்டது. அதனால் அவர் சிறிதி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. நான் இந்த் விஷயத்தை வைத்து அங்கிருந்து வெளியே சென்று விடலாம் என நினைத்தேன். தோனி இந்தியாவுக்காக விளையாடுபவர். அவரிடம் நாம் என்ன பேசுவது என்று நினைப்பேன்” என கூறினார்.
ரவீந்திர ஜடேஜா 2009ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதன்முதலில் விளையாடினார். அதையடுத்து தோனி தலைமையில், 2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சென்னை அணியில் விளையாடினார். 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் குஜராத் லைன்ஸ் அணியில் ஆடிய ஜடேஜா, 2018ஆம் ஆண்டு முதல் மீண்டும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.
மேலும் படிங்க: ஐபிஎல் 2025 : குவாலிஃபையர் 1ல் வெற்றி பெறும் அணியே சாம்பியனாகும் – எப்படி தெரியுமா?
மேலும் படிங்க: Qualifier 1 PBKS vs RCB: மழை பெய்தால் எந்த அணிக்கு பாதிப்பு? முழு விவரம்!