Ravichandran Ashwin Predicts: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 1 இன்று (மே 29) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் வெல்லும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால், இப்போட்டி மீது எகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில், இப்போட்டியில் வெல்லப்போவது யார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அஸ்வின், முதலில் ஆர்சிபி வீரர் மாயங் அகர்வாலுக்கு நான் பாராட்டுகளை தெவித்து கொள்கிறேன். உள்ளுர் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவரை யாரும் ஏலத்தில் வாங்க முன் வரவில்லை. பலரும் மாயங் அகர்வாலை சேர்த்து இருக்கக் கூடாது என சொன்னார்கள்.
ஆர்சிபி அணி அவரை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் அணி எல்லா விதத்திலும் சரியாக இருக்கிறது. எனவே அவர்களை வீழ்த்துவது எனபது சவாலான காரியம் தான். எனினும் மாயங் அகர்வால் அணியில் இல்லை. இன்றைய போட்டியில், பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களை ஆர்சிபி எவ்வாறு கையாள போகிறது என்பதை பொறுத்து போட்டியின் முடிவு இருக்கும்.
என்னை கேட்டால், இன்றைய போட்டியில் ஆர்சிபி வென்று இறுதி போட்டிக்கு முன்னேறினால் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனென்றால், என்னுடைய உள்ளுணர்வு ஆர்சிபி தான் வெல்லும் என சொல்கிறது. ஆனால் பஞ்சாப் அணியை சாதாரணமாக நினைக்கக்கூடாது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தற்போது கேப்டன்சியில் நிரூபித்து உள்ளார்.
அதே சமயம் மும்பை அணியை யாரும் பிளே ஆஃப் சுற்றில் எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள். அதுதான் உண்மை. மும்பையை விட குஜராத் அணி சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் மும்பை மற்றும் குஜராத் போட்டியில் இரு அணிகளுமே சம பலம் கொண்ட அணியாக தான் இருக்கும். மேலும், நான் ஆர்சிபி ரசிகனாகவோ அல்லது பஞ்சாப் ரசிகனாகவோ இருந்தால் நிச்சயம் இறுதி போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ள விரும்ப மாட்டேன் என கூறினார்.
மேலும் படிங்க: Qualifier 1 PBKS vs RCB: மழை பெய்தால் எந்த அணிக்கு பாதிப்பு? முழு விவரம்!
மேலும் படிங்க: ரிஷப் பந்தை திட்டி தீர்த்த அஸ்வின்! என்ன நடந்தது? முழு விவரம்!