சிங்கப்பூர்,
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் -சிராக் ஜோடி, மலேசியாவின் சோ வூய் யிக் – ஆரோன் சியா ஜோடியுடன் மோதியது.
இந்த போட்டியின் முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய சாத்வித் – சிராக் ஜோடி, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 10-21, 18-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது.
இதன் மூலம் 19-21, 21-10, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் சாத்வித் – சிராக் ஜோடியை வீழ்த்தி மலேசியாவின் சோ வூய் யிக் – ஆரோன் சியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Related Tags :