ஐ.பி.எல். தகுதி சுற்று 2: மழையால் தாமதம் ஆன ஆட்டம் தொடக்கம்

அகமதாபாத்,

18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று 2 ஆட்டத்தில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட பஞ்சாப் கிங்ஸ் – வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

போட்டி தொடங்கும் சமயத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மழை பெய்ததன் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 7.30 மணியளவில் தொடங்க வேண்டிய ஆட்டம் சுமார் 2.15 மணி நேரம் தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது. ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.

பஞ்சாப் அணியில் கடந்த 3 போட்டிகளாக களமிறங்காத யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் திரும்பியுள்ளார். மும்பை தரப்பில் ரிச்சர்ட் கிளீசனுக்கு பதிலாக ரீஸ் டாப்லி இடம்பெற்றுள்ளார்.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், ராஜ் பாவா, டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ரீஸ் டாப்லி

பஞ்சாப் கிங்ஸ்: பிரியன்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷசாங்க் சிங், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.